Sunday, December 19, 2010

4. ஆதார பூர்வமான ஹதிஸை மறுப்பவர் யார் ??


ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்துவது கூடாது.
இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் மறுக்கவில்லை. கடந்த காலங்களில் வாழ்ந்த இமாம்களும் மறுத்துள்ளனர்.

இமாம் ஷாஃபி அவர்களின் கூற்று


ஒரு ஹதீஸ் நம்பத்தகுந்ததாக ஆகுவதற்குரிய நிபந்தனைகள் முழுமையாக இருந்தால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது கட்டாயமாகுமா? இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.

اநூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438


இமாம் மாலிக் மற்றும் குர்துபீ அவர்களின் வழிமுறை


குர்துபீ கூறுகிறார் : மாலிக் அவர்கள் கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையானக் கருத்திற்கு முரண்படுகிறது என்று கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையானக் கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தை கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70



இமாம் குர்துபீ அவர்களின் கூற்று


ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்துவது கூடாது.


நூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213


இமாம் இப்னு தய்மியா அவர்களின் வழிமுறை

படைப்பின் துவக்கம் சனிக்கிழûயில் இருந்து அதன் இறுதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டதாகிவிடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் உள்ள குறையை நிறுபித்துள்ளார்கள்.

(என்று, முஸ்லிம் 4997 இல் வரக்கூடிய ஹதீஸை, குரானுக்கு முரண் என்று கூறி மறுக்கிறார்)

நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா பாகம் : 4 பக்கம் : 34




இமாம் ஜுர்ஜானி அவர்களின் கூற்று


ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.


நூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113


இமாம் சுயூத்தி அவர்களின் கூற்று

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்த செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூல்நிலைக்கும் ஒத்துவராத செய்தியும் இந்தவகையில் அடங்கும்.


நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276



இமாம் இப்னுல் கய்யிம் அவர்களின் கூற்று


இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவதாகும்.
நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80



இமாம் அபூபக்கர் சர்ஹஸீ அவர்களின் கூற்று


ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது.


நூல் : உசூலுஸ்ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364


இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.



இதை (நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும்.
நூல் : கஷ்ஃபுல் அஸ்ரார் பாகம் : 4 பக்கம் : 492



(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத செய்தி என்ற) முதல்வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும்.
நூல் : ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ் பாகம் : 2 பக்கம் : 368


இமாம் இப்னு ஜவ்ஸீ அவர்களின் கூற்று


சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவுசெய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸை கண்டால் அது இட்டுக்கட்டப்பட்டச் செய்தி என்று புரிந்துகொள் என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார் !


நூல் : தர்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 277
எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சி­ர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக்கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி.


நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 275



அர்ரபீஉ பின் ஹய்ஸம் அவர்களின் கூற்று


சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பக­ன் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்துகொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்துகொள்ளலாம்.


நூல் : மஃரிஃபத்துல் உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 62



முஹம்மத் பின் அபீபக்கர் அஸ்ஸரயீ அவர்களின் கூற்று


இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி. ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவது அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.
நூல் : நக்துல் மன்கூல் பாகம் : 2 பக்கம் : 218

8. ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!





அந்த நேரத்தில் கெமரூன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த சவூதி சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் ராபிஆ அவர்கள் அந்தக் குழந்தையை தனித்தனியாகப் பிரித்து எடுக்கும் பொறுப்பையும் செலவையும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

ஏப்.21, 2007 அன்று சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட அக்குழந்தைகளுக்கு 16 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 65 மருத்துவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக இரு குழந்தைகளையும் பிரித்து எடுத்தனர்....



இந்தச் செய்தி பபான்கி கிராமத்திற்குக் கிடைத்தவுடன் அந்தப் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமமே சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். சவூதி மருத்துவ வரலாற்றில் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது.

அதற்குப் பிறகுதான் ஆச்சரியம் நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்த கிராமத்திற்கு2008 ஏப்.21 அன்று சென்ற கெமரூன் நாட்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். ஒரு ஆண்டு காலத்தில் 1000 பேர் வாழும் பழங்குடி இன கிராம மக்களில் 400 பேர் இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர். அதோடு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதைக் காண வரும் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அன்றாடம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக பபான்கி கிராமத்தில் இருந்து சுல்தான் ஒமர் என்ற அந்த பழங்குடி இன முக்கியஸ்தர் தலைமையில் 26 பேர் வந்திருந்தனர். அவர்கள் டாக்டர் அல் ரபீஆ அவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்ட சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

அந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது தலா ஒவ்வொரு கால்தான் இருக்கிறது. செயற்கைக் கால் பொருத்துவதற்கு மீண்டும் சவூதி அரேபியா செல்ல இருக்கின்றனர். அந்த குழந்தைகளின் தாய் எமரன்ஸியாவாக இருந்தவர் தற்போது ஆயிஷா என்றும், தந்தை நகோங் ஜேம்ஸ் அகும்பு தற்போது அப்துல்லாஹ் என்றும் மாறி தீனுல் இஸ்லாத்தைக் கடைபிடித்து பிறருக்கும் வழிகாட்டி வருகின்றனர்.

அல்லாஹ் தனது நல்லடியார்களைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான்:- அல்லாஹ்வின்மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும், அநாதைக்கும், சிறைப்பட்டோருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள். உங்களுக்கு நாம் உணவளிப்பது அல்லாஹ்வின் முகத்தை நாடித்தான். உங்களிடமிருந்து எந்தவொரு பிரதிபலனையோ, (அல்லது நீங்கள்) நன்றி செலுத்துவதையோ நாங்கள் விரும்பவில்லை. எனக்(கூறுவர்) (அத்தஹ்ர் 76:8-9)மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:- அவர்கள் (தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து பொருட்படுத்தாது விட்டுவிடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மிகக் கிருபையுடையவனுமாவான். (அந்நூர் 24:22)

"எத்தகைய இஸ்லாம் சிறந்தது?" என பெருமானாரிடம் கேட்கப்பட்டது; "பசித்தவருக்கு உணவளித்து,உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் ஸலாம் சொல்லும் இஸ்லாமே சிறப்புடையது" என்று செம்மல் நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி)

மனிதர்களிடம் யார் கிருபை காட்டவில்லையோ அவர்களிடம் அல்லாஹ் கிருபை காட்டமாட்டான். (புகாரி,முஸ்லிம்)

நீங்கள் எந்த நோயாளியிடம் சென்ற போதினும் அவருக்கு நீண்ட ஆயுளை நல்குமாறு இறைஞ்சவும். ஏனெனில் இதன் காரணமாக அவருக்கு மன ஆறுதல் ஏற்படுகிறது. (திர்மிதீ)

நிச்சயமாக உங்களுடைய பொருட்களும், உங்களுடைய மக்களும் (உங்களுக்குச்) சோதனையாடிருக்கும் என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் - அவனிடத்தில்தான் மகத்தான (நற்) கூலி இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (குர்ஆன் 8:28)

உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னமே உங்களுடைய ரப்பின்பால் நீங்கள் திரும்பிவிடுங்கள்;அவனுக்கு நீங்கள் முற்றிலும் பணிந்து விடுங்கள்; (வேதனை வந்தால்) பிறகு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (குர்ஆன் 39:54)

Sunday, December 5, 2010

4. விரல் ரேகை பற்றி குர்ஆன்


அவ்வாறில்லை! அவனது விரல் நுனி களையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்
(அல் குர்ஆன் 75:4)

மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று இவ்வசனத்தில் (75:4) கூறுகிறான்.
விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகளெல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய காரணம் என்ன வென்றால், மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.
ஏனென்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான்.
ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்பக் கொண்டு வந்து விடுவோம் என்று இந்த அறிவியல் உண்மையை உள்ளடக்கி அல்லாஹ் கூறுகிறான்.


சென்னையின் பிரபலமான சன் டிடெக்டிவ் நிறுவனத்தின் உரிமையாளரும், தமிழக காவல்துறையின் விரல்ரேகை பிரிவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவருமான திரு.வரதராஜன் அவரது பேச்சிலிருந்து...

உடலை அங்ககீனப் படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காணும் நிலையை உருவாக்கி வைத்திருந்தனர் தொடக்க காலத்தில்.

இது சரியாக இல்லாததை தொடர்ந்து குற்றவாளிகளின் உயரம், உடல் பருமன், விரல் நீளம், கைகளின் நீளம் என்னும் அளவீட்டு முறையில் குற்றப்பட்டியல் தயாரித்து வைத்திருந்தனர். ஆனாலும் ஒரே முக ஒற்றுமையைத் தவிர அனைத்து ஒற்றுமையுடன் குற்றவாளிகள் இருந்த போது இந்த முறையும் சரியில்லை என்று ஒதுக்கினர்.

அப்போது வெளிநாட்டறிஞர் ஒருவர் கண்டு பிடித்ததுதான் விரல்ரேகை பதிவு முறை. நமது விரல்களின் மேல்புறத்தை பதித்தல் விரல்ரேகை பதிவு எனப்படுகிறது. ஒரே கையில் உள்ள ஐந்து விரல்களின் பதிவும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை. இரட்டையர்களாக இருந்தாலும் அவர்களின் விரல் ரேகையும் ஒன்றாக இருப்பதில்லை.

தீயில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும் புதிதாக மேல்தோல் வளரும்போது ஏற்கனவே இருந்த ரேகையே மீண்டும் உருவாகிறது.

இடது கை பெருவிரலை நாம் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.அதனால் அதன் ரேகைப் படலம் தெளிவாக இருப்பதால்தான் நாம் இடது கை பெருவிரல் ரேகையை பதியச் சொல்கிறார்கள். தற்போது பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு அலுவலக விஷயங்களுக்காக பத்து விரல்களின் ரேகைகளும் பதிவு செய்யப்படுகிறது.

திரைப்படங்களில் காட்டப்படுவது போல் போலியான விரல்ரேகைகளை தயாரிப்பது எளிதல்ல. அவ்வாறு தயாரிக்கப்பட்டாலும் நிபுணர்கள் அதைக் கண்டறிந்து விடுவார்கள்.
குற்றவாளிகளுக்கான அடையாளமாக மட்டும் பயன்படுத்தாமல் அரசு குடிமக்களுக்கான அட்டைகள் தயாரிக்கும் போது விரல் ரேகையைப் பயன்படுத்தத் தொடங்கினால் போலி ரேஷன் கார்டு தொடங்கி, இறந்தும் வாழும் வாக்காளர்கள் அடையாள அட்டை வரை மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம். (என்ன ஆட்சியாளர்களுக்குத்தான் சிக்கலாகி விடும்!)

உலக அளவில் தமிழக காவல்துறையில் தான் முதன் முதலில் 1895ம் ஆண்டு விரல் ரேகைப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இது பெருமையான விஷயம் ஆனாலும் உலக அளவில் விரல்ரேகைப் பிரிவில் தற்போது பயன்படுத்தப்படும் புதிய யுத்திகள் நமது காவல்துறையில் பயன்படுத்தப்படுவதில்லை. அந்த முன்னேற்றம் இருந்தால் விரல்ரேகை பிரிவில் காவல்துறையின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.

இன்று தேசிய அளவில் விரல் ரேகைப் பிரிவுகளை ஒன்றிணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படி செய்யப்பட்டால் குற்றவாளிகளின் கைரேகை இந்திய அளவில் அனுப்பப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.



பண்டைய பாபிலோனியர்கள் அவர்களுடைய வியாபார கொடுக்கல் வாங்கலை பதிவு செய்வதற்காக தங்கள் கைவிரல் பணிகளை களிமண்ணில் வைத்து அழித்தி பதிந்தனர். வியாபார கொடுக்கல் வாங்கலை சீனர்கள் மை தடவி தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்தனர்.மேலும் அதன் மூலம் குழந்தகளை அடையாளம் காணவும் விரல்ரேகை பதிவுகளை பயன் படுத்தினர்.

19 ஆம் நூற்றாண்டு வரை விரல் ரேகை பதிவுகள் குற்ரவாளிகளை கண்டறிய பயன்படுத்த்ப்படவில்லை.1858 ஆம் ஆண்டு இந்தியாவில் கூக்ளி மாவட்டத்தில் உள்ள ஜங்கிப்பூரில் முதன்மை நீதிபதியாக பபீயாற்றிய ஆங்கிலேயர் சர் வில்லியம் ஹர்ஷ்ல்
குற்றங்களை குறைப்பதற்காக விரல் ரேகைகளை பதிவு செய்யும் முறையை பயன்படுத்த தொடங்கினார்.

அதற்கு சில ஆண்டுகள் கழித்து ஸ்காட்லாந்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பால்ஸ் ஜப்பானில் பபீயாற்றிய பொழுது அநாட்டு கலைஞர்கள் தங்கள் பழங்கால படைப்புகளில்
அவர்களுடைய விரல் ரேகைகளை பதிவு செய்து இருப்பதை கண்டறிந்தார். இது அவருக்குள் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விரல் ரேகை தொடர்பாக ஆராய தொடங்கினார்.1880 இல் பால்ஸ் தனது உறவினரான புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர்
ஜார்லஸ் டார்வினுக்கு கடிதம் எழுதி விரல் ரேகைகளை பகுத்தறிவதற்கான
ஒரு முறையை கண்டறிய உதவி கோரினார்.
ஆனால் டார்வின் மறுத்து விட்டார்.டார்வின் மற்றொரு உறவினரான சர் பிரான்சிஸ் ஹேல்டன் என்பவருக்கு கடிதத்தை அனுப்பி வைத்தார். ஹேல்டன் உலகின் பல பகுதிகளில் உள்ள மனிதர்களின் உயரம் எடை ஆகியவற்றை ஆய்வு செய்து அவை எப்படி பரம்பரை பரம்பரையாக தொடரந்து வருகின்றன. என கண்டரீயும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். அவர் இந்த கடிதத்துக்கு மதிப்பளித்து சுமார் 8 ஆயிரம் விரல் ரேகைகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றி ஆய்வு செய்தார்.

1892 இல் பிங்கர் பிரிண்ட்ஸ் (FINGER PRINTS) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தான் கைவிரல் ரேகைகளை வைகைப்படுத்துவதற்கான் ஒரு முறையினை குறிப்பிட்டு இருந்தார். இது தான் முதன் முதலில் பகுத்தறியப்பட்ட ஒரு நடைமுறை.இது விரல் ரேகைகளில் உள்ள வளைவுகள்,துளைகள்,அலைகள் · (ARCHES,LOOPS,WHORLS) இவற்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது.




.

1. நாக்கு

சுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து
முனைவர். க. மணி

இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று ஆறுவித சுவைகளை நமது நாக்கு அறியக்கூடியது என்று சொல்வதுண்டு. மேலைநாட்டவர்களின் மொழிகளில் சுவைகள் ஐந்து மட்டும்தான் உள்ளன. அவர்கள் துவர்ப்புச் சுவையை விட்டு விட்டார்கள். இது இப்படியிருக்க ஜப்பானியர்கள் "யுமாமி" என்ற ஒரு சுவையைக் குறிப்பிடுகிறார்கள். இந்தச் சுவை மாமிசம் சாப்பிடும்போது அனுபவிக்கும் சுவை என்பது அவர்கள் விளக்கம். இதையறிந்ததும் ஆங்கிலத்தில் சேவரி (Savory) என்று புது சுவை உணர்வை அவர்கள் மொழியில் சேர்த்துக் கொண்டார்கள். உண்மையில் நமது நாக்கு 25 க்கும் மேற்பட்ட சுவைகளை உணரக்கூடியது. அத்தனைக்கும் நம் தமிழில் பெயர்கள் இல்லை.

Tasteஇனிப்புச் சுவையுடைய சக்கரைப் பொருள்கள் உடலும் மூளையும் தொடர்ந்து வேலை செய்வதற்குத் தேவையான எரிசக்தியை வழங்குகின்றன. உப்புச்சுவை இரத்தத்திற்கு வேண்டிய "எலெக்ட்ரோலைட்" எனப்படும் உலோக அயனிகளை வழங்குகிறது. இரத்தத்தில் உப்பு அளவு குறைந்தால் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்துவிடும். சேவரி அல்லது யுமாமி என்று அழைக்கப்படும் மாமிசச் சுவை (தமிழில் இதற்கு இணையான சொல் இல்லை) உடலுக்கு உரம் தரும் புரதத்தை வழங்கும் பொருள்களுக்குச் சொந்தமானது. எனவே இனிப்பு, உவர்ப்பு, சேவரி (சைவ உணவுப் பழக்கமுடையவர்களுக்கு பருப்பிலிருந்து அந்தச் சுவை கிடைக்கிறது) ஆகிய மூன்றையும் நாம் விரும்பிச் செல்கிறோம்.

மனிதன் வேட்டைக்காரனாக வாழ்ந்த காலத்தில் இம்மூன்று சுவைகளையும் நாடி ஒடித் திரிந்ததில் ஒரு காரணமிருக்கிறது. அன்று அவனுக்கு கரும்பாலையோ, உப்பளங்களோ, பிராய்லர் கோழிக்கடைகளோ கிடையாது. உடம்பில் உயிர் தரித்திருக்க வேண்டுமானால் மேற்கூறிய மூன்று சுவைகளும் அவனுக்கு முக்கியம். இன்றும் அதே மூன்று சுவைகள் நம்மை ஆட்டிப் படைப்பதால் அளவின்றி அவற்றைப் புசித்து சக்கரைநோய், மனப்பதற்றம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களால் துன்புறுகிறோம்.

ஐஸ்கிரீம் வேண்டும் ஆனால் அதில் சக்கரையிருக்கக் கூடாது, ஊறுகாயில் உப்பு உறைக்க வேண்டும் ஆனால் அதில் உப்பு இருக்கக்கூடாது, மாமிசச் சுவைவேண்டும் ஆனால் சைவமாக இருக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. இது சாத்தியமா?

நாம் நாக்குக்கு அடிமைதான். அதிலிருந்து நம்மால் விடுபட முடியாது. நாக்கின் பிடியிலிருந்து தப்பிக்க ஒரு வழியிருக்கிறது. துளி சக்கரை போட்டாலும் அது இரண்டு கரண்டி சக்கரையின் இனிப்பைத் தரவேண்டும்; சிட்டிகை உப்பிலிருந்து கால்கரண்டி உப்பின் கரிப்பு கிடைக்க வேண்டும்; மாமிசமே இல்லாமல் மாமிச சுவையை ஏதாவது தரவேண்டும். இப்படி ஒரு தந்திரம் கிடைத்து விட்டால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், எடை கூடுவது போன்ற பிரச்சனையில்லாமல் நாம் இஷ்டம்போல சாப்பிடலாம். எப்படி சக்கரைக்கு அதிகமாக இனிப்பைத் தருவது? உப்புக்கு எப்படி அதிக உவர்ப்பைத்தருவது, மாமிசத்திற்கு எப்படி திகட்டும் அளவுக்கு அதிக சுவையூட்டுவது.. ?

மோனோசோடியம் குளுட்டமேட் என்ற உப்பினை இப்போது பிரியாணி போன்ற புலால் சமையல்களில் சேர்த்துக் கொள்கிறார்கள். அஜினோமோட்டோ என்றால் உங்களுக்கு உடனே தெரியும். அஜினோமோட்டடோ தரும் சுவையைத்தான் சேவரி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். அஜினோமோட்டோ மாமிசச் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. இதுபோல சக்கரையின் இனிப்பை தூக்கலாக்க ஒரு பொருள் இருந்தால் இரண்டு கரண்டி சக்கரை போடுமிடத்தில் அரைக் கரண்டி அல்லது அதற்கும் குறைவை போட்டுச் சமாளிக்கலாம்.

சேக்கரைன், அஸ்பார்ட்டேம் போன்றவை செயற்கையாக இனிப்பைத் தருபவை. அவை பொய்யானவை. அவை தரும் இனிப்பு சக்கரைபோல இருப்பதில்லை, இதனால்தான் சக்கரை நோய்க்காரர்கள் வேண்டா வெறுப்பாக செயற்கை இனிப்பைப் பயன்படுத்துகிறார்கள்.

சுவை மொட்டுகள்

பள்ளிக்கூடப் புத்தகங்களில், நாக்கின் படம்போட்டு, அதில் பல பகுதிகளை கோடிட்டுக்காட்டி இந்த இடத்தில் இனிப்பு, இங்கே கசப்பு, இங்கே காரம்.. என்று குறிப்பிட்டிருப்பார்கள். அடிநாக்கில் கசப்பு உணர்வு இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கும். அப்படி நாக்கில் சுவைகளுக்கான மேப் எதுவும் இல்லை என்று சார்லஸ் ஸூக்கர் (1996 Charles Zuker, Professor of Biology. University of California) என்பவர் கண்டுபிடித்தார். நாக்கில் எல்லா இடத்திலும் எல்லா சுவைகளையும் அறியமுடியும்; இனிப்பு. புளிப்பு, கசப்புக் கென்று தனித்தனி இடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்தார். நம் நாக்கின் மேல்பரப்பு சுற சுறப்பாக இருக்கிறதல்லவா, அவையாவும் மொட்டு வடிவ மேடுகள். அவற்றை சுவை அரும்புகள் அல்லது சுவை மொட்டுகள். ஒவ்வொரு சுவை மொட்டிலும் நூற்றுக்கணக்கான செல்கள் உள்ளன. அச்செல்கள் மூலம் நாம் ஆறு அல்ல 25 வகை சுவைகளை அறிகிறோம்.

Taste

ஒவ்வொரு சுவைக்கும் தனியாகச் செல்கள் உண்டு. அதாவது ஒரு செல் ஒரு சுவையை மட்டும் அறியும். அதன் வேலை உணவில் உள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து தகவலை மூளைக்கு அனுப்புவது. ஒரு மொட்டு ஒரு சுவைக்கு என்பதும். குறிப்பிட்ட நாக்குப்பகுதி ஒரு சுவையை மட்டும் அறியும் என்பதுதான் தவறான கருத்து. நாக்கில் எல்லா பகுதியிலும் உள்ள எல்லா மொட்டுகளிலும் 25 வகை சுவைகளை அறிவதற்கான செல்கள் உள்ளன.

சுவை உணரும் செல்களின் மேற்புறத்தில் உள்ள சவ்வில் சுவையை அறிவதற்கான புரதங்கள் நிறைய உள்ளன. பாயாசத்தில் முந்திரிப்பருப்பு மிதப்பதுபோல (கொஞ்சம் அதிகமாகவே) சுவை அறியும் புரதங்கள் செல்லின் வெளிச் சவ்வில் மிதந்தபடியுள்ளன. இப் புரதங்களின் முப்பரிமான வடிவம் ஒரு கிண்ணம்போன்றது. ஒரு சுவைக்கு ஒரு கிண்ணம் என்று 25 சுவைகளுக்கும் தனித்தனி கிண்ணங்கள் உள்ளன. தேனை நக்கும்போது குறிப்பிட்ட கிண்ணத்தின் பள்ளத்தில் சுவைக்குக் காரணமான மூலக்கூறு வந்து உட்காரும். சாடிக்கு ஏற்ற மூடி போல புரதமும் அதன் சுவை மூலக்கூறும் ஒன்றுடன் ஒன்று டக் கென்று பொருந்திக்கொள்கின்றன. பூட்டும் சாவியும், காலும் செருப்பும் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இதனால் இந்தக் கிண்ணங்களை "ஏற்பி" என்கிறார்கள். அறிஞர் ஸூக்கர், நாக்கிலுள்ள சுவை ஏற்பிகளை எல்லாம் பிரித்து ஆராய்ந்து பார்த்தபோது மனிதருக்கு 25 வகைக்கும் மேற்பட்ட ஏற்பிகள் இருப்பதை அவர் அறிந்தார். அதனடிப்படையில் நம்மால் அத்தனைவகை சுவைகளையும் அறிய முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார். அவற்றை நாம் தொகுத்து ஆறு அல்லது ஐந்து சுவை வகைகளாகப் பிரித்துக்கொள்கிறோம். உண்மையில் கன்னல், தேன், திராட்சை, மாம்பழம், பலா, சப்போட்டா ஆகியவை அனைத்தும் இனித்தாலும் அவற்றில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அல்லவா இருக்கின்றன.

இந்தக் கட்டுரையின் முக்கியமான இடத்திற்கு வந்துவிட்டோம். ஸூக்கர் சுவை ஏற்பி மூலக்கூறுகளை கூர்ந்து ஆராய்ந்தபோது ஒவ்வொன்றின் கிண்ணப்பகுதியிலும் இரண்டு அறைகள் இருப்பதைப் பார்த்தார். ஒரு அறை சுவைக்குக் காரணமான சக்கரை, உப்பு, அமிலம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளின் மூலக்கூறுகள் அமர்வதற்காகவும் அருகே உள்ள இன்னொரு சிறிய அறை சுவையில்லாத ஆயினும் சுவை உணர்வை பலமாகத் தூண்டிவிடும் இன்னொரு பொருளுக்காகவும் இருப்பதைக் கண்டுபிடித்தார். அஜினோமோட்டோ என்ற உப்பு தன்னளவில் சுவையற்றதாக இருந்தாலும் மாமிச உணவில் கலந்ததும் மாமிசத்தின் சுவை பன்மடங்கு கூடுவதன் இரகசியம் இதுதான்.

இதன்படி பார்த்தால், இயற்கையில் சுவைகளைக் கூட்டுவதற்கென்றே பல பொருள்கள் இருக்கும்போலத் தோன்றுகிறது. இல்லாவிடில் ஏன் சுவை உணரும் ஏற்பிகளில் இரட்டை அறை அமைப்பு இருக்கவேண்டும்?

மேலும் ஆராய்ச்சிகள் மேற் கொண்டால் சுவை ஏற்பிகளின் இரண்டாம் அறையில் அமரக்கூடிய சுவைத்தூண்டிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம். சக்கரை முதலான பொருள்களின் சுவைகளை பலமடங்காக அதிகரிக்கச் செய்யலாம். மேலும் முயன்றால் கசப்பின் வீச்சையும் தணிக்கலாம். அதன்பிறகு எல்லோர் வீட்டிலும் மாதம் 5 கிலோ சக்கரைக்கு பதிலாக கால் கிலோதான் வாங்குவார்கள். துளி உப்பு போதும் என்று திருப்தியடைவார்கள். கசப்பையும் வெறுக்காமல் உண்பார்கள். மொத்தத்தில் மனிதன் உணவினால் கெட்டுப்போகாமல் வாழ்நாள் (சிறிதனாலும்) நோயின்றி வாழ்வான்.

2. நாக்கு


மாந்தர்களில் நாக்கு அல்லது நாவானது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும் தரும் உறுப்பு. மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத்தள்ளுவதும் நாக்கே. உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்காகும். நாக்கின் மேற்புறத்தில் சுவையுணர் நுண்புடைப்புகள் பல உள்ளன. நாக்கு பலவாறு வளையவல்லது, எனவே வெவ்வேறு வகையான ஒலிகள் எழுப்பி மொழி பேசுவதற்கும் நாக்கு மிகவும் துணை செய்கின்றது. தமிழில் வழங்கும் ழகரம், ளகரம், லகரம், நகரம் முதலிய எல்லா எழுத்தொலிகளையும் பலுக்கிப் பார்த்தால் மொழி பேசும் பொழுது நாவின் பணி தெளிவாக விளங்கும். வாயில் ஊறும் உமிழ்ந்நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக இருக்கும்.









உடலில் உள்ள தசைகளில் நாக்கு வலிமையான தசைகளில் ஒன்று. உடம்பிலேயே தொடு உணர்ச்சி மிக்க உறுப்பு நாக்கின் நுனி ஆகும். நாக்கின் மேற்புறத்தில் உள்ள நுண்புடைப்புகளில் நான்கு வகையான நுண்புடைப்புகள் உள்ளன. சுவையுணர் நுண்புடைப்புகளுக்கு நாமுடிப்பு என்று பெயர். நாமுடிப்புகளின் அமைப்பைப் பொருத்து அவை இனிப்பு, புளிப்பு, கசப்பு, கரிப்பு,உமாமி ஆகிய ஐந்து வகையான சுவைகளை தனித்தனியாகவும் கூட்டாகவும் உணர்வதாக அறிவியாளர்கள் அறிந்துள்ளனர். அண்மைக்காலம் வரையிலும் நாவின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு சுவைகளை உணர்வதாகத் தவறாக பாடநூல்களில் இருந்து பொதுஅறிவுக் கட்டுரைகள் வரை எங்கும் எழுதப்பட்டு வந்தது. தனித்தனி சுவைகளை உணர நாவினில் தனியான இடங்கள் ஏதும் இல்லை. சுவையை உணர மூக்கால் நுகர்வதும் இன்றியமையாதது.

நாவின் நுண்புடைப்புகளாகிய நாமுடிப்புகளின் நான்கு வகைகளில் ஒருவகையான நாமுடிப்பு மெல்லிய இழைபோல் உள்ளது ( iliform) , இன்னொருவகையான நாமுடிப்பு, நாய்க்குடை அல்லது காளான் போல் தலைப்பகுதி பருத்து உள்ளது (fungiform). மூன்றாவது வகை நாமுடிப்பு ஒரு வளையம் போன்ற வடிவில் உள்ளது. இதுவே நாமுடிப்புகளில் பெரியது (circumvallate). நான்காவது வகை தட்டையாக உள்ளது (foliate).