Sunday, November 28, 2010

5. அசைவத் தாவரங்கள்

சில செடிகளின் மலர்கள், தங்களைத் தேடி வரும் பூச்சிகளையும், வண்டுகளையும் உணவாக உட்கொள்கின்றன. அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இது போன்ற தாவரங்களைக் காணலாம்.

ஜாடி போன்ற பூக்களைக் கொண்ட `பீட்சர்’ என்ற தாவரமும், `சன் ட்’ மலரும், `வீனஸ் பிளை டிராப்’ மலரும் பூச்சிகளைக் கொன்று ருசிப்பதில் வல்லவை. சில தாவரங்கள் முழுநேரமும் பூச்சிகளையும், புழுக்களையும் உணவாக உட்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றன. உலகின் பல பகுதிகளிலும இந்தத் தாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு `டிராசீரா’, `டயானியா’ என்று விஞ்ஞானிகள் அறிவியல் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இந்த அசைவத் தாவரங்கள் தங்களின் இலைகளில் மிகச் சிறிய ரோமம் போன்ற அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. மெல்லிய ரோமங்களில் பசை போன்ற பொருள் காணப்படுகிறது. எனவே இவற்றின் மீது அமரும் புழு, பூச்சிகள் ஒட்டிக்கொள்கின்றன. பின்னர் அவற்றைத் தனது இலைகளால் மூடிச் சுருட்டிக் கொல்கிறது. அந்த உயிரினங்களை அமிலம் போன்ற சுரப்புகளால் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கிரகித்து விடுகிறது.

பின் மறுபடி இலையை விரித்து அடுத்த பூச்சியின் வரவுக்காகக் காத்திருக்
கிறது. இந்தத் தாவரம் மண்ணில் இருந்து நீரையோ, சத்துகளையோ எடுத்துக்கொள்வதில்லை. இத்தாவரங்களுக்குத் தேவையான சத்து முழுவதும் உயிரினங்களில் இருந்தே கிடைக்கிறது.

இதைப் போன்ற விசித்திரமான தாவரங்கள் இந்தியாவில் அரிது. அபூர்வமாக நம் நாட்டின் வறண்ட காடுகளிலும், சில சதுப்புநிலப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இப்படி பூச்சிகளைக் கொன்று சாப்பிடும் தாவரங்கள் பெரிதாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறு. இவை சிறிதாகவே இருக்கின்றன. 3 முதல் 5 அங்குலமே இருக்கும்.

No comments:

Post a Comment